Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் - மோடி 40 நிமிடங்கள் ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் நேற்று தொலைபேசி​யில் 40 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்​தும், ஹார்​முஸ் ஜலசந்​தியைத் திறப்​பது குறித்​தும் இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர்.இந்​தி​யா​வுக்கு முக்​கி​யத்​து​வம்: அமெரிக்​கா, இஸ்​ரேல், ஈரான் நாடு​களு​டன் இந்​தி​யா​வுக்கு மிக நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. 3 நாடு​களின் தலை​வர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி நேரடி தொடர்​பில் உள்​ளார். இஸ்​லா​மா​பாத் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்த பிறகு ரஷ்​யா, துருக்​கி, ஜெர்​மனி, பிரான்​ஸ், பிரிட்​டன் உள்​ளிட்ட நாடு​களின் தலை​வர்​கள் சமரச முயற்​சிகளில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்த சூழலில் இந்​திய பிரதமருடன் அதிபர் ட்ரம்ப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யிருக்​கிறார்.


இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்க அதிபரும் எனது நண்​பரு​மான டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி​யில் அழைத்​தார். அப்​போது பல்​வேறு துறை​களில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்​று​வது குறித்து ஆலோ​சித்​தோம். சர்​வ​தேச விவ​காரங்​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படு​வது குறித்து உறுதி மேற்​கொண்​டோம். மேற்கு ஆசியா நில​வரம் குறித்​தும் (அமெரிக்​கா- ஈரான் போர்) ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் பாது​காப்​பான, தடையற்ற கப்​பல் போக்​கு​வரத்தை உறுதி செய்​வது குறித்​தும் ஆலோ​சனை நடத்​தினோம். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் டெல்​லி​யில் நேற்று கூறும்​போது, ‘‘அமெரிக்​கா, ஈரான் இடையி​லான மோதலுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க பல்​வேறு நாடு​கள் முயற்சி செய்து வரு​கின்​றன. அந்த நாடு​களின் சமரச முயற்​சியை அமெரிக்கா வரவேற்​கிறது. இதே​போல இந்​தி​யா​வின் சமரச முயற்​சி​யை​யும் நாங்​கள் முழு​மனதுடன் வரவேற்​கிறோம்.


அதிபர் ட்ரம்​பும் பிரதமர் மோடி​யும் செவ்​வாய்க்​கிழமை 40 நிமிடங்​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது ஈரான் போர் மற்​றும் இந்​தி​யா-அமெரிக்கா இடையி​லான வர்த்​தகம் குறித்து முக்​கிய​மாக விவா​திக்​கப்​பட்​டது’’ என்​றார். கடந்த வாரம் சனிக்​கிழமை நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யின்​போது, அமெரிக்கா முன்​வைத்த சில நிபந்​தனை​களை ஈரான் ஏற்​க​வில்லை என்​ப​தால் சுமூக முடிவு எட்​டப்​பட​வில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் தெரி​வித்​தார். ஆனால், பேச்​சு​வார்த்தை தோல்வி அடைய அமெரிக்கா தான் காரணம் என ஈரான் குற்​றச்​சாட்டு வைத்​திருந்​தது.