Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“டெல்லியை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்” - மம்தா பானர்ஜி

கொல்கத்தா: “மேற்கு வங்கத்தில் வெற்றியை உறுதி செய்த பிறகு, டெல்லியை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தாவின் சவுரிங்கிப் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியது: “பாஜகவால் எங்களை தோற்கடிக்க முடியாது. நாங்கள் அநீதிக்கு எதிராகப் போராடுகிறோம். எங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறோம். நான் வங்கத்தில் பிறந்தேன். இந்த வங்கத்திலேயே என் இறுதி மூச்சையும் விடுவேன்.

எனக்கு அதிகாரப் பதவி தேவையில்லை. டெல்லியில் பாஜக முழுமையாக தகர்க்கப்படுவதையே நான் விரும்புகிறேன். மேற்கு வங்கத்தில் அவர்களின் அழிவு தவிர்க்க முடியாதது. எனினும், டெல்லியிலிருந்தும் பாஜக வெளியேற்றப்பட வேண்டும்” என்று மம்தா ஆவேசமாகப் பேசினார்.