சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட சங்கரலிங்கனார் மேம்பாலத்தில் ஜெயவிலாஸ் பேருந்தும் மூன்று சக்கர லோடு ஆட்டோ மற்றும் லாரி யும் நேருக்கு நேர் மோதின. இதில் பைபாஸ் பாரதி நகரை சேர்ந்த ஆட்டோ
டிரைவர் கருப்பசாமி (50) உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த பத்து நபர்கள் காயமுற்றனர். இந்த விபத்துக்கு தனியார் பேருந்தின் அசுர வேகம் தான் காரணம் என விபத்தை நேரில் பார்த்த பொது மக்கள் கூறுகின்றனர். போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.