கோவை மாவட்டம் – வால்பாறை தாலுகா – சோலையார்நகர் மின்வாரிய அலுவலகம் சோலை யார்நகர் மின்வாரிய அலுவ லகத்திற்கு உட்பட்ட செலாலிப்பாறை மின் மாற்றி எண்–3 பகுதியில், கனமழையால் பாதிக்கப் பட்ட மின் கம்பங்களை சீர மைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.
போதிய அளவில் மின்வாரிய ஊழியர்கள் இல்லாத நிலையிலும், பொதுமக்க ளுக்கு ஒரு நிமிடம் கூட மின்தடை ஏற்படக் கூடாது என்ற தமிழக அரசின் அறி வுறுத்தலின்படி, உள்ள பணியாளர்களைக் கொண்டு விரைவாக சீர மைப்புப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். அர்ப்பணிப்புடன் பணி யாற்றி வரும் மின்வாரிய ஊழியர்களின் சேவையை கண்ட அப்பகுதி பொது மக்கள், அவர்களை வெகு வாக பாராட்டி தங்களது நன்றியை தெரிவித்தனர்.